கவுந்தப்பாடி ஸ்டேசனில் சதுர்த்தி ஆலோசனை
கோபி: விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனை கூட்டம், கவுந்தப்பாடி போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், புதிய இடங்களில் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்லும் பாதை, கலை நிகழ்ச்சி நடத்துவது குறித்து வலியுறுத்தினர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ், விழா ஒருங்கிணைப்பாளர் முருகேஷ், ஒன்றிய தலைவர்கள் வெங்கடாசலம், ரங்கநாதன் என பலர் பங்கேற்றனர்.