உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோட்டில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில், குழந்-தைகள் திருமண தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.சமூகநலத்துறை பாலின நிபுணர் அனுசியா, மூத்த ஆலோசகர் சரண்யா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகராட்சி நகர நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் முன்-னிலை வகித்தார். இதில், குழந்தை திருமணம் சட்டம் குறித்தும், குழந்தை திருமணத்தினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்-டது.மேலும், பெண்களை உடல் ரீதியாக அளிக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசமாக நேரிலோ, மொபைல்போ-னிலோ பேசுவதும் பாலியல் துன்புறுத்தல் தான் எனவும், அத்தை-கைய துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டால், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ