உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

சேவல் சண்டை:ஐந்து பேர் கைது

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் ராம் நகரில், சேவலை சண்டையிட செய்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்றபோது நான்கு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதி கண்ணன், 33; நாராயணவலசு இந்திரா நகர் விக்னேஷ், 24; பெரியவலசு பூபதி, 29; வீரப்பன்சத்திரம் காளியப்பா வீதி வெங்கடேஷ், 33; மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி ரஞ்சித், 26, என ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை