நீதிமன்ற உத்தரவுப்படி கொடுமுடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
ஈரோடு: கொடுமுடி, பழைய ஈரோடு - கரூர் சாலை பொதுமக்கள் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்றம், பொது நல வழக்கின் அடிப்படையில் கொடுமுடி நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் அருகே, எதிர்-புறம் என சில கட்டடங்களை முறையாக சர்வே துறையினர் முறையாக அளவீடு செய்யாமலும், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் உள்ளனர். இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு, நடந்தும், வாக-னங்களில் செல்ல முடியாமலும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்ற நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.