தாய் வீட்டில் விபரீத முடிவை நாடிய மகள்
பவானி, பவானி அருகே ஊராட்சிக்கோட்டையை சேர்ந்த சரஸ்வதி மகள் கோமதி, 31; இவரின் கணவர் பெரியமோளபாளையத்தை சேர்ந்த கார்த்தி. இரு வாரத்துக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறால், அம்மா வீட்டுக்கு கோமதி வந்து விட்டார். மாதவிடாய் காலவயிற்று வலி இருந்துள்ளது. வழக்கம்போல் ஏற்பட்ட வலியால், எலி மருந்தை தின்று விட்டார். இதையறிந்த சரஸ்வதி மகளை, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து விட்டார். இதுகுறித்து பவானி போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.