உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

சத்தியமங்கலம்: சித்திரை மாத அமாவாசை தினமான நேற்று, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வந்தனர். காலை முதலே வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயில் தாக்காத வகையில் குண்டம் இறங்கும் இடத்தில், தகர ஷீட்களை கோவில் நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். குண்டத்தில் உப்பு, மிளகு துாவி வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோவிலில் அன்னதானம் வழங்கினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ