கம்பத்ராயன் கிரி மலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது கம்பத்ராயன் கிரி பெருமாள் வீற்றிருக்கிறார். மலை உச்சியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று காலை முதலே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரத் தொடங்கினர். தீவிர சோதனைக்குப் பிறகே வனத்துறையினர் அனைவரையும் அனுமதித்தனர். கோவிலை தவிர வேறெங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். வேண்டுதல் நிறைவேறிய ஒரு சில பக்தர்கள், 5 அடி மற்றும் 10 அடி உயரத்தில் வேல் கம்பு கொண்டு சென்று நட்டனர்.உள்ளூர் மக்கள் மட்டும் இரவில் அங்கேயே தங்கி, கொடி மரத்தில் தீபம் ஏற்றி வழி பட்டனர். சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, 800க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய வந்ததாக, சத்தியமங்கலம் வனத்துறையினர் தெரிவித்தனர்.பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் கடம்பூர் போலீசார் ஈடுபட்டனர்.