தி.மு.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்
தி.மு.க., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்காங்கேயம், அக். 23-காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க., ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர் கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது.தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநில தொழிலாளர் அணி துணை செயலாளருமான தமிழ்ச்செல்வன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பேசினர். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்வது, தொகுதியில் செய்யப்பட்ட பணி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தல் உள்பட பல்வேறு அறிவுரை வழங்கினர்.காங்கேயம், வெள்ளகோவில், குண்டடம், சென்னிமலை ஒன்றிய நகர செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.