உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதையில் ஆற்றில் குளித்த டிரைவர் சாவு

போதையில் ஆற்றில் குளித்த டிரைவர் சாவு

சத்தியமங்கலம்:கோபி அருகேயுள்ள கடத்துார் தாச நாயக்கனுாரை சேர்ந்தவர் சக்திவேல், 38; இண்டியம்பாளையம் பகுதி தனியார் மில்லில் கார் டிரைவராக வேலை செய்தார். மது அருந்தி விட்டு செம்படாபாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சத்தி போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சக்திவேலுக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !