பவானியில் அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் பலி
பவானி: பவானியில் அரசு பஸ் மோதியதில், மாற்றுத்திறனாளி முதியவர் பலியானார்.ஈரோட்டில் இருந்து பவானிக்கு, 5ம் நெம்பர் டவுன் பஸ், நேற்று காலை, 6:30 மணயளவில் சென்றது. டிரைவர் குருசாமி, 46, ஓட்டினார். பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பஸ் சென்றபோது, சாலையை கடந்த மாற்றுத்திறனாளி முதியவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். பவானி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பவானி, மீன் மார்க்கெட் அருகே உள்ள, மெக்கான் வீதியைச் சேர்ந்த ராஜூ, -8௦, என தெரிந்தது.