உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நெரூர் பிரிவு சாலையில் மின் விளக்குகள் தேவை

நெரூர் பிரிவு சாலையில் மின் விளக்குகள் தேவை

கரூர், கரூர் அருகே நெரூர் பிரிவில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் - வாங்கல் சாலை, நெரூர் பிரிவில் சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக கரூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. ரவுண்டானா அமைக்கப்பட்டாலும், மின் கம்பங்கள் நிறுவப்படவில்லை. இதனால், நெரூர் பிரிவு சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, நெரூர் பிரிவு ரவுண்டானாவில் மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகளை பொருத்த, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை