பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றம் போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதம்
ஆத்துார்: பா.ம.க., கொடிக்கம்பம் அகற்றச் சென்றபோது, போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே தென்னங்குடிபாளை-யத்தில் நேற்று, பா.ம.க., மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலை-மையிலான கட்சியினர், கான்கிரீட் பீடம் அமைத்து, கொடிக்-கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையறிந்த, ஆத்துார் டவுன் போலீசார், வருவாய்த்துறையினர் நேரில் சென்று, அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என்றனர். மாவட்ட செயலர் உள்ளிட்ட கட்சியினர், '1989ல், கொடிக்கம்பம் இருந்தது. அதே இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கப்ப-டுகிறது' என்றனர்.அதற்கு போலீசார், 'பழைய கொடிக்கம்பம் இருந்ததற்கான ஆதாரம் கொடுத்துவிட்டு, பணிகள் மேற்கொள்ளலாம்' என்றனர். அப்போது, போலீசாருடன், பா.ம.க.,வினர் வாக்குவாதம் செய்-தனர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார், 'அனுமதி பெற்று கொடிக்-கம்பம் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் நடவ-டிக்கை எடுக்கப்படும்' என்றார். அதன்பின், கொடிக்கம்பம் பீடம் மற்றும் கொடியை அகற்றிக் கொண்டனர். இச்சம்பவத்தால், அப்-பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.