உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எக்ஸ்பிரஸ், பயணியர் ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து

எக்ஸ்பிரஸ், பயணியர் ரயிலில் கரூர் - ஈரோடு சேவை ரத்து

சேலம்: கரூர் - ஈரோடு தடத்தில் புகழூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதி-களில் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால் திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், இன்று, வரும், 3, 6 காலை, 7:20க்கு கிளம்பி, கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது.அதேபோல் இன்று, வரும், 3, 6ல், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும், கரூர் முதல் ஈரோடு வரை ரத்து செய்யப்படுகிறது. இன்று கிளம்பும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்-பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் முதல் பாலக்-காடு வரை, பணி முடிந்த பின் இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை