உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் டிராபிக் ஜாம்

மலை சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் டிராபிக் ஜாம்

சத்தியமங்கலம்,: சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஆயிரக்க-ணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆசனுார், காரப்பள்ளம் சோதனை சாவடி அருகில் சாலையோர மூங்கில் மரங்கள், நேற்று காலை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 2 கி.மீ., துாரம் வாக-னங்கள் அணிவகுத்து நின்றன. ஆசனுார் வனத்துறையினர், தீய-ணைப்பு துறையினர், 3 மணி நேரத்துக்கும் மேலாக மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 மணிவரை போக்குவரத்து கடுமை-யாக பாதித்தது.திம்பம் முதல் தமிழக எல்லை வரை சாலையோரம் மூங்கில் மரம் டன் கணக்கில் காய்ந்து கிடக்கிறது. வனத்துறையினரும் அகற்ற மறுப்பதால் அவ்வப்போது சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை