மேலும் செய்திகள்
மின் கசிவால் எரிந்த தொழிலாளி குடிசை
14-May-2025
பவானி, அத்தாணி அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 60; குடிசை வீட்டில் வசிக்கிறார். மூன்று ஆடுகள், இரண்டு பசு மாடு, கோழி வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் இரண்டு ஆடு, இரண்டு கோழி தீயில் சிக்கி பலியாகி விட்டன. இரண்டு பசு மாடுகளும் லேசான தீக்காயம் அடைந்தது. சோலார் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்தது.
14-May-2025