உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓ.ஏ.பி., பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை

ஓ.ஏ.பி., பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை

ஈரோடு, முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு (ஓ.ஏ.பி.,) தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது, இலவச சேலை, வேட்டி வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஓ.ஏ.பி., திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 1.60 லட்சம் பயனாளிகள் உள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும். விடுபட்டவர்களுக்கு தீபாவளிக்கு பின் வழங்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !