மேலும் செய்திகள்
233 மாணவ- மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கல்
06-Jan-2026
ஈரோடு: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தில், 1,593 கல்லுாரி மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, லேப்டாப்களை வழங்கி பேசியதாவது:இந்த திட்டத்தில், 10 லட்சம் இலவச லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 10,500 லேப்டாப்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப்கள் அவரது கல்விக்கு உதவவும், பள்ளி இடைநின்றலை தவிர்த்து கல்லுாரி கல்விக்கு செல்லவும் இத்திட்டங்கள் உதவும்.இந்நிகழ்ச்சியில், 1,593 மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
06-Jan-2026