உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி

போதிய தெருவிளக்கு வசதியின்றி கணபதிபாளையம் பிரிவில் அவதி

கோபி, கோபி அருகே கணபதிபாளையம் பிரிவில், போதிய தெருவிளக்கு வசதியின்றி, வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.கோபி அருகே கலிங்கியம்-மொடச்சூர் சாலையில் உள்ள கணபதிபாளையம் பிரிவு வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் அவ்வழியே போதிய தெருவிளக்கு வசதியின்றி, பாதசாரிகள் முதல், வாகன ஓட்டிகள் வரை அவதியுறுகின்றனர். குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரத்தில், அவ்வழியே செல்வோர் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது மின்வாரியம் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்