உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

புகையிலை பொருள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

கோபி, கோபி அருகே புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த மளிகை கடைக்காரரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே அரசூர் சாலையில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சத்தியமங்கலம் அருகே அரசூர்புதுாரை சேர்ந்த பழனிச்சாமி, 66, மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து, பழனிச்சாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை