உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் தொடரும் கனமழை மொடக்குறிச்சியில் 52 மி.மீ., பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில், ௫௨ மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்--11, கொடு-முடி-18, நம்பியூர், பெருந்துறை தலா-7, சென்னிமலை-26, பவானி-1.80, வரட்டுபள்ளம் அணை-2.80, கோபி-7.20, எலந்த-குட்டை மேடு-3, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம் அணை 1.60, பவானிசாகர்-1.40, தாளவாடியில்-8.10 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வரை லேசான மழை தொடர்ந்தது. கனமழையால் ஈரோடு-கரூர் பிரதான சாலை சாவடிபாளையத்தை அடுத்த ஆரியன்காடு ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டூவீலர், கார், ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஸ், லாரிகள் மட்டும் சென்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ