மேலும் செய்திகள்
மகளுடன் தாய் மாயம்
24-Jun-2025
ஈரோடு, ஈரோடு, இடையன்காட்டு வலசு, நடேசன் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி, 37, ஏ.சி., மெக்கானிக். இவர் மனைவி இந்துமதி, 26; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பெரியசாமி கடந்த, 5ல் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு வந்தார். மகன் மட்டும் வீட்டில் இருந்தார். மனைவி, ஐந்து வயது மகளை காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. ஈரோடு அரசு மருத்துவமனை போலீசில், பெரியசாமி அளித்த புகாரின்படி, மகளுடன் மாயமான இந்துமதியை, போலீசார் தேடி வருகின்றனர்.
24-Jun-2025