உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

காங்கேயம்: கோமாரி நோய் தாக்குதலை தாங்கும் திறன் உள்ளதால் காங்-கேயம் இன மாடுகள் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதோடு, வாங்குபவர்கள் எண்ணிக்கை, மாடுகளின் எண்ணிக்-கையும் அதிகரித்து வருகிறது.கரிய நிறம், கூரான கொம்புகள், மலையை ஒத்த திமில், களிற்றிக்-கீடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரளவைக்கும் காங்-கேயம் இன காளைகள் உலக பிரசித்தி பெற்றவை. அலங்கா-நல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஜல்லி-கட்டுகளில் தமது பிடிபடாத ஆற்றலினால் புகழ் சேர்ப்பவை.கடும் வறட்சியையும் தாங்கி, குறைவான தீவனத்தை உட்-கொண்டு, சத்தான பாலைத்தரும் காங்கேயம் இன பசு மாடு-களை, திருமணமான பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தரும் வழக்கம் இன்றளவும் மேற்கு தமிழகத்தில் மரபாக கடைபிடிக்கப்-படுகிறது. விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு, அதிக பால் தரும் வெளி-நாட்டு கலப்பின பசுக்கள், ஜல்லிக்கட்டு தடை போன்ற காரணங்-களால் இவ்வின மாடுகளின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்-டத்தால், இளைஞர்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி-யது.இதனால் இவற்றை வளர்ப்பதும், வாங்குவதும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த மாடுகளின் பால் ஏ-2 ரகம் என்பதால் அதிக சத்து கொண்டதாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் தரப்படுகிறது. மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் இருந்தது. இதில் பெரும்பாலும் கலப்பின மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஆனால், நாட்டு மாடுகள் உள்-ளிட்ட காங்கேயம் இன மாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்-ளாகவில்லை. தற்போது காங்கேயம் நாட்டின மாடுகளை, மக்கள் விரும்பி வாங்குவதால், மாடுகள், 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இதனால் மாடு வளர்ப்பவர்-களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாடுகளின் எண்ணிக்கை தற்போது, 20 லட்சமாக உயர்ந்துள்ளது. கால்நடை ஆர்வலர் மேற்-கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையே இதற்கு காரணம் என்று, காங்கேயம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ