விநாயகர் சிலை ஊர்வலம் புளியம்பட்டியில் ஆய்வு
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதிகளில், விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கவுள்ள டானாபுதுார், முத்துமாரியம்மன் கோவில், நால்ரோடு சோதனைச்சாவடி, கோவை சாலை, பஸ் ஸ்டாண்ட் வழித்தடத்தில், கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன், ஈரோடு எஸ்.பி., சுஜாதா நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதை தொடர்ந்து புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.