உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்

ஈரோடு: ஈரோடு, சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த தம்பதி பெருமாள்-அலமேலு. இவர்களின் மகள் சங்கீதா, 19; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தங்கி படித்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர், மாயமானார். தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் அலமேலு புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.* காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், மாத நாயக்கன்பாளையம், வாரணாசி கவுண்டர் தெருவை சேர்ந்த சாமிகண்ணு-அன்னகொடி தம்பதி மகள் ஜமுனா, 15; அரசு பாலிடெக்னிக் முதலாமாண்டு மாணவி. கடந்த, 8ம் தேதி காலை கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாய் அன்னக்கொடி புகாரின்படி காஞ்சிகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி