உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் கோபியில் வேலை நிறுத்தம்

ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் கோபியில் வேலை நிறுத்தம்

கோபி:ஜே.சி.பி., வாகன விலை உயர்வு, சாலை வரி உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு ஆகியவற்றால், ஒருங்கிணைந்த ஒரே வாடகை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, அதன் உரிமையாளர்கள் கோபியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கோபி அருகே குள்ளம்பாளையம் பகுதியில், தனியார் இடத்தில், 30க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரங்கள், வரிசையாக அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !