மேலும் செய்திகள்
நந்தா கல்லுாரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ
05-Apr-2025
ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்-லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை வழங்கி, அவர்களை பாராட்டும் வகையில், வேலை வாய்ப்பு தினம் நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்-முகன் தலைமை வகித்தார். கோவை கார்ட்ராபிட் மென்பொருள் நிறுவன தலைவரும், முதன்மை கண்காணிப்பாளருமான ரமேஷ் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்-டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். நந்தா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகு-பதி, பணி நியமனம் பெறும் மாணவர்களை வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினர் ரமேஷ் சுப்பிரமணியன், பணி நியமன ஆணைக்கான உறுதி சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி, ஆண்டுக்கு, 44 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவன் உட்பட அனைத்து மாணவர்களுக்கும், பாராட்டு, வாழ்த்து தெரிவித்தார். நந்தா தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் நன்றி கூறினார்.
05-Apr-2025