உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைலாசநாதர் கோவில் தெப்ப தேரோட்டம் கோலாகலம்

கைலாசநாதர் கோவில் தெப்ப தேரோட்டம் கோலாகலம்

தாரமங்கலம்,: தைப்பூசத்தையொட்டி தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம் கடந்த, 13ல் நிறைவடைந்தது.நேற்று முன்தினம் திரு ஊடல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குளத்தில், தெப்ப தேரோட்டம் நடந்-தது.இதையொட்டி முன்னதாக காலையில் பூசாரிகள் புனிதநீர், பூக்-களால் தெப்பத்தை துாய்மைப்படுத்தினர். மாலையில், கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார், நாய-கியை, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், தெப்பக்குளம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளச்செய்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்து, தெப்பத்தேரில் எழுந்தருளச்செய்தனர். பின் குளத்தில், 3 முறை தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரதோஷ நாயனார், நாயகி, முக்-கிய வீதிகள் வழியே கோவிலை அடைந்தது. தாரமங்கலம் போலீசார், ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா, கோணகாபாடி அருகே சரபங்கா ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை