சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் தொடக்கம்
சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, 36ம் ஆண்டு விழா-வாக நவ., 2ம் தேதி சனிக்கிழமை துவங்குகிறது.விழா தொடக்கமாக அன்று காலை, 6:30 மணிக்கு கிழக்கு ராஜவீ-தியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி மலை கோவிலுக்கு புறப்பாடு நடக்கும். அதை தொடர்ந்து மலை மீதுள்ள கோவிலில், 9:30 மணிக்கு விக்னேஸ்-வர பூஜை நடக்கிறது.தொடர்ந்து விழா நடக்கும் ஆறு நாட்களும் காலை, 10:00 மணிக்கு யாக பூஜை, மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவ-ருக்கு அபிஷேகம் நடக்கும். அதை தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு மகா தீபாரதனை நடக்கும். தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.நவ.,7 ம் தேதி மதியம், 1:௦௦ மணிக்கு வேல் வாங்கும் நிகழ்வும் அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடி-வாரம் எழுந்தருள்வார்.அங்கு இரவு, 8:00 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி காலை கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கும்.விரதம் இருப்போருக்கு...விழாவில் காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் நவ., 2ம் தேதி சனிக்கிழமை மதியம், 12:௦௦ மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத-சிவாச்சாரியார் காப்பு அணிவிப்பார்.