காங்கேயம் இன மாடுகள் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம்: காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. இடைத்தரகர் யாருமின்றி மாடுகளை விலைபேசி மக்கள் வாங்கினர். மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 63 கால்நடைகளை மக்கள் கொண்டு வந்தனர். மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 26 கால்நடைகள், 10 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.