உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஈரோடு: ஈரோடு, தண்ணீர்பந்தல் பாளையம், புதுகாலனியை சேர்ந்த விவேக் மனைவி சிந்துமதி, 23; தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். குழந்தையுடன் இருவரும் ஆறு மாதமாக பெங்களூரில் வசிக்கின்றனர். கடந்த, 19ல் சிந்துமதி, குழந்தையுடன் ஈரோட்டுக்கு வந்து, மாமியார் தீபா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 30ம் தேதி காலை சிந்துமதியை காணவில்லை. வீட்டில் தாலிக்கொடியை கழற்றி வைத்து விட்டு, கணவருடன் வாழ பிடிக்கவில்லை என எழுதி வைத்த கடிதம் சிக்கியது. தீபா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை