நீதிமன்றத்துக்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்
தாராபுரம், சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசலை சேர்ந்தவர் பிரபு, 39; தனது மனைவி ஊரான திருப்பூர் மாவட்ட்ம தாராபுரத்தில் வசித்து வந்தார். வழக்கு தொடர்பான வாய்தாவுக்கு, தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு நேற்று காலை வந்தார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.