வாலிபர் மீது பாய்ந்தது திருமண தடை சட்டம்
ஈரோடு, தாளவாடி, பாரதிபுரம், மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், 22; இவர், 16 வயது சிறுமியை, அவரின் பெற்றோர் சம்மதத்தில் திருமணம் செய்தார். ஆனாலும், குழந்தை திருமணம் செய்ததாக, சமூக நலத்துறை அலுவலர் கிருஷ்ணவேணி, சத்தி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், கதிர்வேல் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.