மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி கூட்டம் அமைச்சர் அழைப்பு
03-Feb-2025
காங்கேயம்: வெள்ளகோவிலில் நாளை தி.மு.க., சார்பில், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, தி.மு.க., இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாமிநாதன் தலைமை தாங்குதிறார். கூட்டத்தில் மக்கள் பங்கேற்குமாறு, அமைச்சர் தலைமையில், குண்டடம் கிழக்கு ஒன்றியத்துக்கஉ உட்பட்ட எல்லப்பாளையம் புதுார் ஊராட்சி வஞ்சிபாளையம் பகுதிகளில், நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், இளைஞரணியினர், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
03-Feb-2025