ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்
கோபி: ஈரோடு மாவட்ட சிறைச்சாலை, கோபி கச்சேரிமேடு அரசு மருத்-துவமனை சாலையில் இயங்குகிறது. இங்குள்ள பத்து அறை-களில், 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள, சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்-றனர். இந்நிலையில் கைதிகளின் அறைகளில், சிறைத்துறையினர் நேற்று வழக்கம்போல் சோதனையிட்டனர். அப்போது ஒரு கைதியிடம் மொபைல்போன் பேட்டரியும், மற்றொரு அறைக்குள் மொபைல்-போனும் சிக்கியது. இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்-தனர். இரண்டும் சிறைக்குள் எப்படி வந்தது என்பது குறித்து, சிறைத்துறையினர் விசாரிக்கின்றனர்.