உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

27 மதுபாட்டிலுடன் முத்துார் முதியவர் கைது

ஈரோடு: ஈரோடு, மலையம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற முதி-யவரிடம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். சந்துக்கடையில் விற்பதற்காக, 27 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் முத்துார், செல்வகுமார கவுண்டன்வலசை சேர்ந்த சுப்பிரமணி, 65, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை