விபத்தில் காயமடைந்த பெயின்டர் சாவு
டி.என்.பாளையம்: -கோபி அருகே கணபதிபாளையம் மனுவகாட்டை சேர்ந்தவர் அபிமன்யு, 34; பெயின்டிங் தொழிலாளி. மனைவி அம்பிகா. இரு மகள்கள் உள்ளனர்.கடந்த, 7ம் தேதி கள்ளிப்பட்டியில் சத்தி -அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது கொண்டையம்பாளையத்தை சேர்ந்த ஜோசப் ஆரோக்கியம், 25, ஓட்டி வந்த டூவீலர் மோதி-யதில், பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவம-னையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில், அபிமன்யு நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பங்க-ளாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.