உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்

உளுந்து வடையில் பல்லி பேக்கரி கடைக்கு அபராதம்

தாராபுரம்,: உளுந்து வடையில் பல்லி இறந்து கிடந்ததால், தாராபுரம் அருகே பேக்கரி கடைக்கு, அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம், உடுமலை சாலையை சேர்ந்தவர் செல்வம், 45; இவருக்கு சொந்தமான பேக்கரியில், அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன், நேற்று காலை உளுந்து வடையை பார்சலாக வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அப்போது வடைக்குள் இறந்த நிலையில், பல்லி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாரா-புரம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற சிறுவன் உள்-ளிட்ட 4 பேர், கூறிய தகவலின்படி, அலங்கியம் போலீசார் விசா-ரித்தனர். உணவு பாதுகாப்பு துறையினர் பேக்கரிக்கு சென்றனர். ஆய்வுக்கு பிறகு, ௩,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ