உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

மின்துறையை கண்டித்து மக்கள் சாலை மறியல்

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம், அண்ணாதுரை சிலை பஸ் நிறுத்தம் அருகே, சத்தி -அத்தாணி சாலையில் மின் துறையை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.டி.என். பாளையம் பவர் ஹவுஸூக்கு உட்பட்ட, காசிபா-ளையம் மின் நிலையம் பகுதியில், இந்த மாதத்தில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பலமுறை ஆன்-லைனில் புகார் அளித்தும், இதுவரை பதில் அளிக்கப்பட-வில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மின் பராமரிப்பு பணிக்காக காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மின்-தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று முன்-தினம் மதியம் 2:00 மணி முதல் நேற்று காலை, 10:00 மணி வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பங்களாபுதுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைய-டுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.டி.என். பாளையம் பகுதியில் தென்னை, பாக்கு தோப்புகள் அதிகம் உள்ளன. அப்பகுதி வழியாக லைனை கொண்டு சென்று தான், மின் இணைப்பு வழங்கி வருகிறோம். நேற்று இன்சு-லேட்டர் பழுதானதாலும், நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை. தற்போது சரி செய்து மின் இணைப்பு வழங்கி விடுவதாக, மின்வாரிய அதிகா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ