வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு பைன்
சென்னிமலை, சென்னிமலை - காங்கேயம் பிரதான சாலை வனப்பகுதி வழியாக காங்கேயம் செல்லுகிறது. வனப்பகுதி சாலையோரங்களில் குப்பை கொட்டுவோருக்கு, வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக வனப்பகுதி சாலையில், இரவு-பகல் பாராமல் திடீர் ரோந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னிமலை பார்க் ரோட்டை சேர்ந்த விஜய், 42, சாக்குப்பையில் போட்டு, சென்னிமலை-கணுவாய் சாலையோரம் வீச வந்தார். அவரை பிடித்த வனத்துறையினர், 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.