உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேம்பாலம் அமைக்க பூஜை

மேம்பாலம் அமைக்க பூஜை

தாராபுரம் தாராபுரத்தை அடுத்த ஆத்திக்களத்தில், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு வளாகத்தில், 2.30 கோடி மதிப்பீட்டில், 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் கிடங்கு கட்டவும், சின்னப்புத்துார்-வேலுார் சாலை சின்னக்கரை ஓடை குறுக்கே, 5.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கவும் பூஜை நேற்று நடந்தது. இதில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோல் தாராபுரம்-உடுமலை ரோடு ரவுண்டானா அருகே, 51 லட்சம் ரூபாய் மதிப்பில், மழை நீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட எட்டு பணிகளுக்கு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை