உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கோவிலில் சரஸ்வதிக்கு பூஜை

மலை கோவிலில் சரஸ்வதிக்கு பூஜை

மலை கோவிலில் சரஸ்வதிக்கு பூஜை புன்செய் புளியம்பட்டி, அக். 12-புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையத்தில் மு.ஈ.ச., (முருகன், ஈஸ்வரர், சரஸ்வதி) மலை கோவில் உள்ளது. இங்கு சரஸ்வதிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கும். இதன்படி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.* ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விழா, அந்தியூர் பகுதிகளில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை