உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கழிவுநீருடன் சேர்ந்த மழை நீர் சாலையில் தேங்கியதால் அவதி

கழிவுநீருடன் சேர்ந்த மழை நீர் சாலையில் தேங்கியதால் அவதி

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. டானா புதுார், நொச்சிக்குட்டை, தோட்ட சாலை, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட தோட்ட சாலை, அம்மன் நகர் பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடி கடும் துர்நாற்றம் வீசியது. அதேசமயம் நம்பியூர் மற்றும் சத்தியமங்கலம் சாலையிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். முறையாக சாலை மற்றும் வடிகால் அமைக்காததால், ஒவ்வொரு மழையின் போதும் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தேங்கி தவிப்பது தொடர்வதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை