உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொண்டை ஊசி வளைவில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு

கொண்டை ஊசி வளைவில் தடுப்பு கம்பிகள் சீரமைப்பு

சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலையை சுற்றி பார்க்க, சில நாட்களுக்கு முன், மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் காரில் வந்திருந்தனர். 61வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு, 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் இருந்தவர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். நேற்று முன்தினம் சேதமடைந்த தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !