ஓய்வு பெற்ற போலீசார் கோபியில் சங்கமம்
கோபி: தமிழக போலீஸ் துறையில், 1984ல் பணியில் சேர்ந்து, நடப்பாண்டில் ஓய்வு பெற்ற போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி கோபியில் நேற்று நடந்தது. முன்னாள் டி.எஸ்.பி., துரைராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் துரைசாமி வர-வேற்றார். முன்னாள் எஸ்.ஐ.,க்கள் மனோகரன், தியாகராஜ், ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பணி ஓய்வு பெற்ற இரண்டாம் நிலை போலீசார் முதல் எஸ்.ஐ.,க்கள் வரை, 50 பேர் பங்கேற்றனர்.