மேலும் செய்திகள்
குண்டம் விழாவுக்கு வரத்தொடங்கிய எரிகரும்பு
23-Dec-2024
வராஹி அம்மனுக்குபஞ்சமி அபிஷேகம்
06-Dec-2024
கோபி, டிச. 24-கொளப்பலுார் அருகே அம்மன் கோவில் பதியில் பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 11ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை மூலவர் அம்மனுக்கு, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், திரவிய பொடிகள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதையடுத்து இரண்டு கிலோ சந்தனம் மற்றும் பன்னீர் கொண்டு, சந்தனக்காப்பு அலங்காரம் காலை, 7:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை மறுதினம் குண்டம் திருவிழா நடக்கிறது.
23-Dec-2024
06-Dec-2024