உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பச்சை நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

கோபி, டிச. 24-கொளப்பலுார் அருகே அம்மன் கோவில் பதியில் பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, கடந்த, 11ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை மூலவர் அம்மனுக்கு, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம், திரவிய பொடிகள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதையடுத்து இரண்டு கிலோ சந்தனம் மற்றும் பன்னீர் கொண்டு, சந்தனக்காப்பு அலங்காரம் காலை, 7:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை மறுதினம் குண்டம் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை