விபத்தில் சிக்கிய வாகனம் தப்பிய பள்ளி மாணவர்கள்
பவானி: அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், பத்துக்கும் மேற்பட்ட மாணவர்-களை ஏற்றிக்கொண்டு நேற்று சென்றது. டிரைவர் குணசேகரன், 38, ஓட்டினார். அம்மாபேட்டை-ஊமாரெட்டியூர் சாலையில், அரசு கால்நடை மருத்துவமனை அருகில் வளைவில் திரும்பியபோது, சாலையோர கரும்புக் காட்டில் பக்கவாட்டில் வேன் கவிழ்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களும், லேசான காயங்களுடன் தப்பினர். அம்மாபேட்டை போலீசார், கிரேன் மூலம் வேனை மீட்டனர்.