ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஈரோடு:ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் தரிசனமாக உற்சவர் நடராஜர்-தருணேந்துசேகரிக்கு தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்-ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் அபிஷேகங்-களை பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.