உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனித்துவ அட்டை பெற சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு

தனித்துவ அட்டை பெற சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடக்க உள்ளது.இதன்படி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனைத்து புதன் கிழமைகளிலும், மாதத்தின் முதல் மற்றும், 3 வது வெள்ளிக்கிழமைகளில் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், 2வது, 4வது வெள்ளி கிழமைகளில் கோபி அரசு மருத்துவமனையிலும் முகாம் நடக்க உள்ளது.இதில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஆதார் அட்டை நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், 4 போட்டோ, ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ