பழங்குடியின மக்களுக்கு 25, 26ல் சிறப்பு முகாம்
ஈரோடு: தேசிய பழங்குடியினர் தின விழாவையொட்டி, ஈரோடு மாவட்-டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் அந்தியூர், சத்தி, தாளவாடி தாலுகாவில் வரும், 25, 26ல் முகாம் நடக்கிறது.இதில் பழங்குடி மக்கள், தங்களுக்கான ஜாதிச்சான்றிதழ், வரு-மான சான்றிதழ், கல்வி உதவித்தொகை, கிசான் கார்டு, கிசான் சம்மன், முதல்வர் காப்பீடு திட்டம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா, தோட்டக்கலை துறை விழிப்புணர்வு நிகழ்வுகள், நலத்திட்ட உத-விகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கலாம்.25ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை அந்-தியூர் தாலுகா, பர்கூர் அரசு பழங்குடியினர் உறைவிட தொடக்கப்-பள்ளி, சத்தி தாலுகா குத்தியாலத்துார் அரசு பழங்குடியினர் உறை-விட துவக்கப்பள்ளி, குன்றி பஞ்., அலுவலக சமுதாய கூடத்தில் முகாம் நடக்கிறது. 26ல் தாளவாடி தாலுகா, கேர்மாளம் வனச்-சோதனை சாவடி, தலமலை அரசு பழங்குடியினர் உறைவிட துவக்கப்பள்ளி, ஆசனுார் அரசு பழங்குடியினர் உறைவிடப்பள்-ளியில் முகாம் நடக்கிறது.