சிறப்பு நீதிமன்றம் வி.சி.,க்கள் மனு
ஈரோடு,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் சாதிக், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் மீது ஜாதிய ரீதியிலான குற்றச்செயல் அதிகமாக நடக்கிறது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுகிறது. ஆனால், அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க தாமதமாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்க, எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கும், நீதித்துறைக்கும் பரிந்துரை செய்து, சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.